விளாத்திகுளத்தில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நம்பர் 1 முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

விளாத்திகுளம், மே 25: விளாத்திகுளத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், மும்மூர்த்தி, சின்னமாரிமுத்து, காசிவிஸ்வநாதன், நவநீதகண்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் ராஜசேகரன் வரவேற்றார்.

அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கீதாஜீவன் பங்கேற்று பேசுகையில், மக்களுக்கு தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்கள் நல்வாழ்விற்கான இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்பு வழங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையிலே உள்ளது, என்றார்.

மார்க்கண்டேயன் எம்எல்ஏ பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் திட்டங்கள் அனைத்தையும் விளாத்திகுளம் தொகுதி மக்கள் அனைவரும் பெற்று வருகின்றனர். விளாத்திகுளம் எப்போதும் திமுகவின் பக்கம் இருக்கும். வரும் காலங்களில் அரசின் திட்டங்களால் விளாத்திகுளம், வளமான தொகுதியாக மாற்றப்படும், என்றார். கூட்டத்தில் பேச்சாளர்கள் ஆரணி மாலா, முகவை ராமர், சரத்பாலா, மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, பேரூராட்சி தலைவர்கள் அய்யன்ராஜ் (விளாத்திகுளம்), வனிதா (புதூர்), ராமலட்சுமி (எட்டயபுரம்), பேரூர் செயலாளர்கள் மருதுபாண்டியன், பாரதிகணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் அன்புராஜன், ராஜாக்கண்ணு, முத்துலட்சுமி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், பஞ். தலைவர் சீதாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

Related Stories: