மண்ணச்சநல்லூரில் 28ம்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருச்சி, மே 25: திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு டிஆர்ஓ பழனிகுமார் தலைமையில் மண்ணச்சநல்லூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் மே 28ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மண்ணச்சநல்லூர் வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: