வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்குவோர், பராமரிப்போருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி, மே 25: வேளாண் இயந்திரங்கள் பழுதுநீக்கம் மற்றும் பராமரிப்பு சேவை வழங்குநருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திருச்சி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையால் செயல்படுத்தப்படவுள்ளது. 15 நாட்கள் நடைபெறவுள்ள இப்பயிற்சி 18 வயது முதல் 45 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு (அ) மேல்நிலைக்கல்வி (அ) அரசு தொழிற்பயிற்சி கல்வி (ஐடிஐ) (அ) பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் திருச்சி வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் (வே.பொ), அரசு இயந்திரக் கலப்பைப் பணிமனை அலுவலகத்திற்கு நேரில் வந்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, கல்வித் தகுதிச்சான்று மற்றும் வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல் உள்ளிட்ட விவரங்களை வழங்கி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, ‘உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், அரசு இந்திரக் கலப்பை பணிமனை, 20,வ.உ.சிலை, கண்டோண்மென்ட், திருச்சி-620001’ என்ற முகவரியில் நேரிலோ, 0431-2460928, 9842476576, 8056841434, 9791540901 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்’ என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: