×

குழந்தைகள் கல்வி கற்று உயர் பதவி இலக்கை அடையும் வரை பணியாற்றிட வேண்டும்

அரியலூர், மே 25: அரியலூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில், கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆய்வினை மே 23, 24ம் தேதி ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ஆய்வு மேற்கொண்டார். இதில் 23ம் தேதி அன்று அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் இல்லம் மற்றும் சிறப்பு தத்துவத்தினை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது இல்லம் இளைஞன் நீதி சட்டம் 2015ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் குழந்தை இல்லத்தின் ஒரு கட்டடைப்பினையும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு தரமான சேவைகள் செய்திடவும் ஆலேசானைகள் வழங்கினர்.

மேலும் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்திட சிறப்பு திட்டங்கள் தீட்டி பணிபுரிந்த இடமும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் உயிர் இழப்பை தடுத்திடவும் புதிய உத்திகளை கையாண்டு இது போன்ற சமூக அவலங்களை தடுத்து குழந்தைகள் சிறப்பான கல்வி கற்று உயர்பதவி இலக்கை அடையும் வரை நாம் சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை கூறினர். கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அரசு நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட விபரங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டனர். இக்கூட்டத்தில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் முரளி, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்ததலைவர் ராமராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேணி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கீதாராணி, மாவட்ட சமூக நல அலுவலர் சாவித்ரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...