×

கணவர் மாயம்: மனைவி புகார்

ஜெயங்கொண்டம், மே 25: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தை சேர்ந்த யாகோப்(59). இவர் நேற்று முன்தினம் கல்லக்குடியில் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு மொபட்டில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் யாகோப் மனைவி பவுலின் பல்வேறு இடங்களில் தேடியும் யாகோப் கிடைக்கவில்லை. இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் யாகோப் மனைவி பவுலின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...