×

மணக்குடி கிராமத்தில் வழி தவறி வந்த மூதாட்டி உறவினரிடம் ஒப்படைப்பு

அரியலூர், மே 25: அரியலூர் மாவட்டம் மணக்குடி கிராமத்தில் மூதாட்டி ஒருவர் அமர்ந்து ஏதேதோ பேசி வருவதை அறிந்த கிராமக்கள் ஊராட்சி செயலாளர் தேசிங்குராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையறிந்து அங்கு சென்று பார்த்தபோது தோடு, மாட்டல், செயின் என சுமார் 15 சவரன் நகைகள் மற்றும் பணத்துடன் அமர்ந்து இருப்பதை அறிந்து மூதாட்டியிடம் விசாரித்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ஆதார் அட்டையில் உள்ள விபரங்களை வைத்து அவருடைய பெயர் நல்லம்மாள் என்றும், கடலூர் மாவட்டம் கீழச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் மூதாட்டியின் பேரனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மூதாட்டியின் பேரன் முருகன் மற்றும் உறவினர்கள் நேற்று மணக்குடி கிராமத்திற்கு வந்து மூதாட்டியை அழைத்து சென்றுள்ளனர். மேலும் மூதாட்டியை பத்திரமாக மீட்டு கொடுத்த கிராமமக்களுக்கு முருகன் தனது நன்றியை தெரிவித்தார்.

Tags : Manakkudi ,
× RELATED மணக்குடியில் உலக வன நாள் கொண்டாட்டம்...