செங்கல்பட்டு: மயங்கி கிடந்த மூதாட்டியை சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது, அவர் பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்த ரூ.71 ஆயிரத்தை, பத்திரமாக அவரிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் வசிப்பவர் அமுதா (70). பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அமுதா, சாலையோரத்தில் மயங்கிக் கிடந்தார். இதைபார்த்த பொதுமக்கள், அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அமுதா, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.