மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கூலி பிரச்னை கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தது. இதுதொடர்பாக, கடந்த 2015ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வியாபாரிகள் விரும்பும் ஆட்களை கொண்டு தங்களது உடமைகளை இறக்கி கொள்ளலாம். அதை தடுத்து நிறுத்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உரிமை இல்லை. அப்படி நடந்தால் அதை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், வியாபாரிகள் விரும்பும் பட்சத்தில், அவர்கள் கூலி தொழிலாளர்களை வைத்து, உடமைகளை இறக்கி கொள்ளலாம் என கடந்த 19.1.22 அன்று தீர்ப்பு வழங்கியது.