அண்ணாநகர்: சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெருவை சேர்ந்த பைனான்சியர் ஆறுமுகம் (36), கடந்த 18ம் தேதி ஷெனாய் நகர் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், கடந்த 20ம் தேதி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் பிரபல ரவுடி உஷ் என்கிற சந்திரசேகர் (28), இவரது கூட்டாளி ரோகித்ராஜ் (32) ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை அமைந்தகரை போலீசார் 3 நாள் காவலில் விசாரித்து வருகின்றனர்.