சென்னை: மும்முனை இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளருக்கு 4 ஆண்டுசிறை தண்டனை விதிக்கப்பட்டது.முகப்பேர் வேணுகோபால் தெருவை சேர்ந்தவர் அரிதாஸ். இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது வீட்டிற்கு மும்முனை இணைப்பு கோரி அதே பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, மின்வாரிய இளநிலை பொறியாளர் மணி ₹1000 லஞ்சம் கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அரிதாஸ் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் அரிதாஸிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு மறைந்திருந்தனர். அப்போது மணியை கையும் களவுமாக அவரை மடக்கி பிடித்தனர்.