கோவை, மே 24: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் 12-ம் வகுப்பும், மற்றொரு மகள் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். இருவரும் பள்ளிக்கு தொடர்ந்து செல்லாமல், படிப்பிலும் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளனர். இதையடுத்து, சிறுமிகள் இருவரையும் கோவை ஆவாரம்பாளையம் பகுதியிலுள்ள தனது தம்பியின் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டுள்ளனர். இந்நிலையில், சிறுமிகள் இருவரும் வெளியில் செல்வதாக கூறி சென்று உள்ளனர். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கோவை கிழக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமிகள் குறித்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் நிஷா, உதவி ஆய்வாளர் வித்யா ஆகியோர் சிறுமிகளின் பாடப்புத்தகத்தை சோதனையிட்டபோது, சில மொபைல் எண்கள் கிடைத்தது. அந்த எண்ணில் உள்ளவர்களை தொடர்பு கொண்ட போலீசார் சிறுமிகள் அழைத்தால் உடனடியாக தகவல் அளிக்க கூறினர். இந்நிலையில், திருச்சியில் உள்ள இன்ஸ்டாகிராம் தோழிக்கு சிறுமிகள் போனில் பேசியது தெரியவந்தது.