நெல்லிக்குப்பம், மே 24:
நெல்லிக்குப்பத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் இ.ஐ.டி பாரி அனைத்து கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு அறிவித்த கரும்பு ரகங்களை நடவு செய்தால் ஆலை நிர்வாகமே பதிவு செய்திடு, எரிந்த கரும்புக்கு பிடித்தம் செய்த பணத்தை திரும்ப கொடுத்திடு. கரும்பில் கழிவு என்ற பெயரில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லிக்குப்பம் இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இ.ஐ.டி பாரி கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தென்னரசு தலைமை தாங்கினார்.