பண்ருட்டி, மே 24: பண்ருட்டி விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தவிர்ப்பதற்காக காவல்துறை சார்பில் ரோந்து வாகனம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை கீழகுப்பத்தை சேர்ந்த ஏசி மெக்கானிக் வீரமணி(24), நண்பர் மதன்குமார்(17) ஆகிய இருவரும் தனது ஊரிலிருந்து பைக்கில் சென்றனர். வீரமணிக்கு நிச்சயம் செய்யப்பட்டு திருமணத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே உள்ளநிலையில் தனது நண்பருக்கு பத்
திரிக்கை வைத்துவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொள்ளுகாரன்குட்டை அருகே எதிரே வந்த ரோந்து வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து பைக்கின் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.