செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவு, ரத்த பரிசோதனை மையம், புற நோயாளிகள் பிரிவு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த அவர், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள், அவர்களுடன் இருந்த உறவினர்களிடம் சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.