செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மறைமலைநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். நேற்று காலை தமிழ்ச்செல்வன் வேலைக்கு செல்வதற்கு புறப்பட்டபோது, பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதேபோல், நேற்று முன்தினம் இரவு மறைமலைநகர் அருகே பெரிய செங்குன்றம் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த 2 பைக்குகள் மாயமானதாக, மறைமலைநகர் போலீசாருக்கு புகார் வந்தது.