கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு குறைதீர் முகாம்: 276 மனுக்கள் குவிந்தன

திருச்சி, மே 24: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. டிஆர்ஓ பழனிகுமார் தலைமை வகித்து மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 276 மனுக்கள் பெறப்பட்டது. சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் அம்பிகாபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: