தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலிச் செயின் பறிப்பு

வல்லம், மே 24: தஞ்சாவூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி சீனிவாசன் நகரை சேர்ந்தவர் பழனிவேல். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் வெளியே வரண்டாவில் தனது மனைவி மாரியம்மாள்(40) மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் மாரியம்மாள் தனது குழந்தை இயற்கை உபாதைக்கு செல்வதற்காக காம்பவுண்ட் கேட்டை திறந்து அழைத்துச் சென்றுவிட்டு திரும்பினார். வரும்போது கேட்டை பூட்டாமல் வந்து மீண்டும் தூங்கிவிட்டார். அப்போது கேட்டை திறந்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டிருந்த மாரியம்மாளின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச் செயினை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த மாரியம்மாள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் அந்த 2 மர்மநபர்களும் தாலிச்செயினுடன் தப்பியோடினர்.

இது குறித்து தமிழ்ப்பல்கலை கழக போலீசில் மாரியம்மாள் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: