×

பெரம்பலூர் தனியார் கல்லூரி

பெரம்பலூர், மே 24: பெரம்பலூர் ஆர்.ஜி.புரம் அஷ்ரப் அலி மகள் ஷோபியா(22). இவர் பெரம்பலூர் தனியார் கல்லூரி கல்லூரியில் பிஎஸ்சி நியூட்ரிசன் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்றவர் வகுப்ப றையிலேயே காலை 10 மணிக்கு மயக்கம் அடைந்துள்ளார். பிறகு கல்லூரியின் வாகனம் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்டியாக் அரஸ்டால் மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Tags : Perambalur Private College ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது