கோவில்பட்டியில் திருநங்கைகள் திடீர் மறியல்

கோவில்பட்டி, மே 24: கோவில்பட்டி பஸ் நிலையத்தில் திருநங்கைகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி  அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் கணவன், மனைவி  இருவர் பஸ் ஏற வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திருநங்கைக்கும்,  தம்பதியினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வாலிபர், திருநங்கையை சரமாரியாக அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதனை  கண்டித்து அங்கிருந்த சக திருநங்கைகள், பஸ் நிலையத்தில் திடீரென மறியலில்  ஈடுபட்டனர். தகவலறிந்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய எஸ்ஐ அரிகண்ணன்  மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: