கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

கடலூர், மே 21: கொடுஞ் செயல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு, கடலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி சக்திகணேசன் தலைமையில், போலீசார் கொடுஞ் செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில், தளராத நம்பிக்கையுடைய, இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என்றும், எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும்,

மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும், ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை, எதிர்த்துப் போராடுவோம். என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், இளங்கோவன், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சவுந்தரராஜன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம், ஆயுதப்படை ஆய்வாளர் விஜயகுமார், காவல் நிர்வாக அலுவலர்கள் ஜெயராஜ், சிவக்குமார் மற்றும் காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Related Stories: