×

பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1,121 பேர் ‘ஆப்சென்ட்’

திருப்பூர், மே 21: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ்-2 பொதுத் தேர்வை 1,121 பேர் எழுதவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 91 தேர்வு மையங்களில் 218 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 25 ஆயிரத்து 717 மாணவ-மாணவிகள், தனித் தேர்வர்களாக 167 மாணவ- மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 884 பேர் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். மொழிப்பாட தேர்வுகள் முடிந்து பாடம் வாரியாக தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த இயற்பியல் தேர்வுக்கு 11,776 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் 11,457 பேர் தேர்வு எழுதினார்கள். 319 பேர் எழுதவில்லை. பொருளாதாரம் தேர்வுக்கு 12,841 பேர் விண்ணப்பித்திருந்தனர். 12,099 பேர் தேர்வு எழுதினார்கள். 742 பேர் எழுதவில்லை. கம்ப்யூட்டர் டெக்னாலஜி தேர்வுக்கு 388 பேர் விண்ணப்பித்திருந்தனர். 328 பேர் எழுதினார்கள். 60 பேர் எழுதவில்லை. ஆக மொத்தம் 25,005 பேர் விண்ணப்பித்திருந்ததில் 23,884 பேர் தேர்வு எழுதினர். 1,121 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Tags :
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...