பந்தலூர், மே 21: பந்தலூர் அருகே தேவாலா மூச்சுகுன்னு பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலை மற்றும் மின்சார வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். மின்சார வசதி இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் தற்போது பொதுதேர்வு துவங்கி நடைபெற்று வருவதால் படிப்பதற்கு சிரமமாக உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.