மூச்சுக்குன்னு பகுதியில்

பந்தலூர், மே 21: பந்தலூர் அருகே தேவாலா மூச்சுகுன்னு பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலை மற்றும் மின்சார வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். மின்சார வசதி இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் தற்போது பொதுதேர்வு துவங்கி நடைபெற்று வருவதால் படிப்பதற்கு சிரமமாக உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் சாலை வசதி இல்லாததால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அவசர காலத்திற்கு வெளியே செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, தேவாலா மூச்சுக்குன்னு பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: