×

பேரியம் உப்பு கலந்த பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

விருதுநகர், மே 21: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பேரியம் உப்பு கலந்து பட்டாசுகள், சரவெடிகளை தயாரித்து சேமித்து, விற்பனை செய்வதை தடுக்க தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. மேற்படி ஆய்வுகளில் சிறிய அளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்டு 405 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

அதிக அளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் சஸ்பென்ட் செய்யப்பட்டது. சஸ்பென்ட் செய்யப்பட்ட ஆலைகளில் உற்பத்தி பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாததால் பணியாற்றிய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கருதி சஸ்பென்ட் உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. தொடர் ஆய்வில் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு