10ம் வகுப்பு மாணவி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை

கோவை, மே.21:  கோவை வடவள்ளி பழனி கவுண்டன் புதூர் அருகே உள்ள பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பரமசிவம். போட்டோகிராபர். சொந்தமாக ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் பிரதிக்‌ஷா (16). இவர் வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதில், பிரதிக்‌ஷா 2 தேர்வுகளை எழுதி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய அவர் அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், பிரதிக்சாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு கடினமாக இருந்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: