கோவை, மே.21: கோவை வடவள்ளி பழனி கவுண்டன் புதூர் அருகே உள்ள பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பரமசிவம். போட்டோகிராபர். சொந்தமாக ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் பிரதிக்ஷா (16). இவர் வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதில், பிரதிக்ஷா 2 தேர்வுகளை எழுதி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய அவர் அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.