கோவை, மே 21: கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடுமையான உழைப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, அரசியல் ராஜதந்திரம், மக்களை நேசிப்பது, உதவிசெய்தது என இவை எல்லாம்தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் என்ற நற்பெயரை பெற்றுத்தந்துள்ளது. அவரது தலைமையில் தமிழகத்தில், லஞ்சம் தவிர்க்கப்பட்டு, நேர்மையாக ஆட்சி நடைபெறுகிறது. கொரோனா நிவாரணமாக குடும்பத்திற்கு தலா ரூ.4 ஆயிரம், மகளிருக்கு இலவச பேருந்து, ஆவின் பால்விலை குறைப்பு, தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை,