ஈரோடு,மே21: ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயிலில் உள்ள ஸ்ரீசீதேவி அம்மன் கோயில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இக்கோயில் திருவிழா மே 4ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து கிராமசாந்தி, கொடியேற்றம், தீர்த்தம் எடுத்து வருதல், குண்டம் இறங்குதல், பொங்கல் வைக்கும் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.