×

வாகனங்கள் மோதி வாலிபர் பலி

பரமக்குடி, மே 21: ஏர்வாடியை சேர்ந்தவர் பாலமுருகன்(35). இவர் நேற்று மினி சரக்கு வாகனத்தில் பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலை முடிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கரூர் வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியது. இதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வேனில் வந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ