×

லாரி மோதி முதியவர் சாவு

கமுதி, மே 21: கமுதி அருகே கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருவு(65). இவர் நேற்று கீழராமநதி கிராமத்தில் இருந்து கமுதி நோக்கி டூவீலரில் சென்றார். பெருமாள்தேவன்பட்டி விலக்கு ரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று மோதியதில் குருவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி தெய்வகனி(60), அளித்த புகாரின் பேரில், கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் பூமிநாதனை(45) கைது செய்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு