×

மின் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, மே 21: சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சந்திரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: காரைக்குடியில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் மே 24 காலை 11 மணி முதல் 1 மணி வரை காரைக்குடி மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் காரைக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளவும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
× RELATED சீர்காழியில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு பேரணி