×

10 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை, மே 21: மதுரை மாநகர தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் செல்லூர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், இங்கிருந்த இன்ஸ்பெக்டர் மாடசாமி தெப்பக்குளம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் தெப்பக்குளம் க்ரைம் இன்ஸ்பெக்டர் முகமது இத்திரிஸ் கரிமேடு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், புதூர் க்ரைம் இன்ஸ்பெக்டர் வசந்தா கூடல்புதூர் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும், இங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சரவணன் திருநகர் க்ரைம் பிரிவிற்கும், மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தெப்பக்குளம் க்ரைம் பிரிவிற்கும், குழந்தை கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா மத்திய குற்றப்பிரிவிற்கும், மதுரை வடக்கு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பிரியா, புதூர் க்ரைம் பிரிவிற்கும், அரசு மருத்துவமனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா தேவி, மதுரை வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், ஐகோர்ட் மதுரை கிளை க்ரைம் இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு