×

ரயில் மோதி மாணவர்கள் பலி

சென்னை, மே 21: அரக்கோணத்தை சேர்ந்த கார்த்திக் (19), அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார்.   இவர், நேற்று முன்தினம் இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றபோது, பெரம்பூர்- வியாசர்பாடி இடையே ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

வண்டலூரை சேர்ந்த ஹரிஷ் பாரதி (20), அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இ.சி 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று அதிகாலை 3 மணிக்கு பேசின்பாலம் -வியாசர்பாடி இடையே மின்சார ரயில் மோதி இறந்தார்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...