அம்பத்தூர், மே 21: அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரை சேர்ந்த நாராயணன் (58), தனது மனைவியுடன் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்றிருந்தார். நேற்று காலை வீடு திரும்பியபோது, கதவின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 25 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ₹1.50 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.