ஜி.ஹெச் வளாகத்தில் முதியவர் சடலம் மீட்பு

திருச்சி, மே 20: திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவு வார்டுக்கு அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், சிகிச்சைக்கு வந்தவரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: