திருச்சி, மே 20: திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் ரவி (54). தனியார் நிறுவன காவலாளி. நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து ரவியை அவரது சகோதரர் சுந்தர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ரவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.