திருவாரூர், மே 20: திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வினை 16 ஆயிரத்து 312 பேர்கள் எழுதவுள்ளதாக கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -2 தேர்வுகள் நாளை நடைபெறுவதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் தேர்வு குறித்த முன்னேற்பாடு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், திருவாரூர் மாவட்டத்தில் குரூப் -2 தேர்வு திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 3 மையங்களுக்குட்பட்ட 40 இடங்களில் 56 தேர்வறைகளில் நாளை (21ம் தேதி) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது.