திருப்பூர்,மே20: திருப்பூர் கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2022-ம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருது அகிம்சை மற்றும் பிறகாந்திய முறை மூலம் சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான சிறப்பான பங்களிப்புக்காகவும், மனித துன்பங்களை குறிப்பாக சமூகத்தை குறைந்த சலுகை பெற பிரிவுகளின் பங்களிப்புக்காகவும், இந்த விருது தனிநபர்களுக்கும்,நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது.மேலும், சமூகநிதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி தேசியம்,இனம், மதம், பாலினம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அனைத்து நபர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.