காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் விபத்தில் வாலிபர் சாவு

கோவை,  மே 20: கோவை செம்மேடு பகுதியை சேர்ந்தவர் அசோக் (30). டைல்ஸ் வேலை  செய்யும் தொழிலாளி. இவரும் இவரது நண்பர் சபரி கணேசன் (29) என்பவரும்  பைக்கில் சிறுவாணி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். வெள்ளிமேடு  பிரிவு பகுதியில் சென்றபோது  அவ்வழியாக வந்த பஸ்சின் மீது பைக்  எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அசோக் இறந்தார். சபரி  கணேசன் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ஆலாந்துறை  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: