×

மொபட் விபத்தில் தனியார் ஊழியர் பரிதாப பலி

கோவில்பட்டி: மே 19: கோவில்பட்டி அருகே சாலைப்புதூர் மஞ்சு நகரை சேர்ந்தவர் கண்ணன் என்ற சீனிவாசன்(56). இவர், கோவில்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடம்பூரில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு நேற்று மதியம் மொபட்டில் ஊர் திரும்பினார். அவருடன் விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே மடத்துப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ்(52) என்பவரும் வந்தார். கோவில்பட்டி அருகே இடைசெவல் பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மொபட் சாலையோரத்தில் கவிழ்ந்தது.   இதில் கண்ணன் என்ற சீனிவாசன் உயிரிழந்தார். காயமடைந்த சுப்புராஜிக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு