பீரோவை உடைத்து நகைகள் கொள்ளை

திருவில்லிபுத்தூர், மே 19: திருவில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் காலனி மாலதி (45). இவரது தந்தை கீழப்பட்டி காளியம்மன் தெரு பகுதியில் வசித்து வருகிறார். தற்போது சென்னையில் உள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி மாலதி மகள் கோகிலா, தன் தாத்தா வீட்டுக்குச் சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. புகாரின் திருவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: