×

பஸ் நிலையத்தில் அதிகாரி ஆய்வு

சிவகாசி, மே 19: சிவகாசி பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வந்து செல்ல வட்டார போக்குவரத்து அலுவலர் உரிமம் வழங்க வேண்டும். இந்த உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். சிவகாசி பஸ் நிலையத்தின் உரிமத்தை இந்தாண்டு புதுப்பிக்க மாநகராட்சி அதிகாரிகள் விண்ணப்பித்தனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் குமரவேல் நேற்று பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் சரவணன், உதவியாளர் குமார் உடனிருந்தனர்.

Tags :
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு