இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

உத்தமபாளையம், மே 19: உத்தமபாளையத்தில் பேரறிவாளன் விடுதலைக்கு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தமிழ் புலிகள் கட்சியினர் கொண்டாடினர். பேரறிவாளன் விடுதலையையொட்டி உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் நடந்த கொண்டாட்டத்திற்கு மாநில இளம்புலிகள்அணி செயலாளர் தலித்ராயன் தலைமை தாங்கினார். தேனிதமிழரசி, ஜெயமகிழவேந்தன் முன்னிலை வகித்தனர்.தேனி மேற்கு மாவட்ட செயலாளர் முகமதுஅலிஜின்னா, மாவட்ட துணை செயலாளர் மணிவண்ணன், பிரபாதமிழரசி தேனி (கிழக்கு) மாவட்ட துணைச் செயலாளர் சிலமலை இளந்தமிழரசு மற்றும் உத்தமபாளையம் பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: