மண்டபம் வந்த மீனவர்கள்

ராமநாதபுரம், மே 19: மண்டபம் மீனவர் காலனி வேலாயுதம், ஆற்றாங்கரை விசார் அலி, அழகன்குளம் ராஜா கனி, தங்கச்சிமடம் சதீஷ் ஆகியோர் மண்டபம் வடக்கு கடற்கரையில் இருந்து மார்ச் 23ல் மீன்பிடிக்க சென்றனர். இவர்களை, இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்று யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது. கிளிநொச்சி நீதிமன்றம் 4 பேரையும் மே 12ல் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்திய வெளியுறவுத் துறை அலுவலகத்தில் தங்கியிருந்த 4 பேரும், கொழும்பிலிருந்து நேற்று முன்தினம் அதிகாலை விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கினர். வாகனம் மூலம் அழைத்து வரப்பட்ட 4 பேரையும், மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானி தலைமையில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: