பஸ் டிரைவர் கைது

திருவாடானை, மே 19: அரசு பேருந்து மோதி பைக்கில் சென்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர். திருவாடானை அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்த பாலாஜி மகன் கார்த்திக்(22), தொண்டி புதுக்குடி சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (19). இவர்கள் இருவரும் டூவீலரில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கருமொழி கிராமம் அருகே வரும்போது, எதிரே வந்த அரசு பஸ் மோதி இருவரும் படுகாயமடைந்தனர். தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுனர் மண்டபத்தைச் சேர்ந்த பூபேஷ் பாண்டியன்(40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: