×

சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, மே 18: சுற்றுச்சூழல் விருது பெற விண்ணப்பிக்கலாம் எனன அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேலாண்மை, ஆராய்ச்சிக் கட்டுரை ஆகிய பிரிவுகளில் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தனி நபர்கள், தன்னார்வ நிறுவனங்கள், வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் சுற்றுச்சுசூழல் விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. 2021ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் விருதுகள் பெற சிவகங்கை மாவட்டத்தில் தகுதியான நிறுவனங்கள், தனி நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை WWW.environment.tn.gov.in என்ற இணையத்தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், சுற்றுச்சூழல் துறை, தரைத்தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை 600 015 என்ற முகவரிக்கு வருகின்ற 23.5.2022க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...