×

அவதூறு வழக்கிற்கு இடைக்காலத் தடை

மதுரை, மே 18: பரமக்குடியைச் சேர்ந்த வின்சென்ட் ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அதிமுகவைச் சேர்ந்த நான் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். இதனால் எனக்கும் மாவட்ட ெசயலாளர் முனியசாமிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் என்னை கட்சியில் இருந்து நீக்கினார். அவர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதவிட்டதாக புகார் அளித்துள்ளார். இதன் பேரில் பரமக்குடி டவுன் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேல் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சம்பந்தப்பட்ட வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து, மனுவிற்கு போலீசார் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது