கோவில்பட்டி, மே 18: கோவில்பட்டி பாரதிநகர் பகுதியில் சலவைத்துறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சலவைத் தொட்டியை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ திறந்து வைத்தார்.
கோவில்பட்டி பாரதிநகர் பசுவந்தனை சாலையில் உள்ள சலவை துறையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பில் புதிதாக சலவை தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சலவைத்துறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டியினை திறந்து வைத்தார். பின்னர் தொட்டியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாயையும் திறந்து வைத்தார்.