சேந்தமங்கலம், மே 14: கொல்லிமலை ஒன்றியம் தின்னனூர்நாடு ஊராட்சியில் நாமக்கல் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாய தொழில்நுட்ப கருத்தரங்கம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமை வகிதார். இதில் அறிவியல் நிலைய பேராசிரியர்கள், வல்லுனர்கள், குழுத் தலைவர் அழகுதுரை ஆகியோர் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் பேசுகையில், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் மீன் வளர்ப்பு, நெல், மிளகு, காபி மற்றும் தோட்டப் பயிர்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.