பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள் கைது

திருப்பூர், மே 13: திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி புவனேஷ்வரி (40). இவர் அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 3ம் தேதி புவனேஷ்வரி மார்க்கெட்டில் பூ வாங்கி விட்டு மொபட்டில் போயம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். பிச்சம்பாளையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பைக்கில் வந்த வாலிபர் 2 பேர் திடீரென புவனேஸ்வரி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து புவனேஷ்வரி கொடுத்த புகாரின் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூர் காந்திநகரில் வசிக்கும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காளீஸ்வரன் (27), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜகுமார் (29) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories: