புதிய நிர்வாகிகள் தேர்வு

ஊட்டி, மே 13:நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்க தேர்தல் நடந்தது. ஊட்டியில் நடந்த இந்த தேர்தலில் பலரும் போட்டியிட்டனர். இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சந்திரபோஸ் தேர்வு செய்யப்பட்டார்.

துணைத் தலைவராக முன்னாள் அரசு வக்கீல் பாலநந்தகுமார், செயலாளராக பீம்ராஜ், இணைச் செயலாளராக ரேஷ்மா, பொருளாளராக சுபாஷினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories: