காரமடை அருகே காஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி படுகாயம்

மேட்டுப்பாளையம், மே 13: மேட்டுப்பாளையம் காரமடையை அடுத்துள்ள தொட்டிபாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ரங்கன்(65).இவரது 2வது மனைவி வசந்தாமணி(60).இவர் 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்று அந்த வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 8 ஆம் வகுப்பு படிக்கும் அஜீத்குமார்(14) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து நேற்று மாலை வீட்டிற்கு வந்த வசந்தாமணி சமைப்பதற்காக காஸ் ஸ்டவ்வை பற்ற வைத்துள்ளார்.

அப்போது காஸ் கசிவு இருந்ததால் சிலிண்டர் முழுவதும் பற்றி எரிந்து வெடித்தது. இதில் ரங்கன், வசந்தாமணி ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: